/* */

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்

கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரவேண்டாமென அறிவுறுத்தல்

HIGHLIGHTS

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்
X

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று குறைந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் என்ற பெயரில் தேயிலை தோட்டங்களை உருவாக்கினார்.

இந்த தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் தற்போது சுமார் 700 பேர்தொழிலார்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக தோட்டத் தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதால், தொற்றில் இருந்து தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்து, இன்று முதல் தேயிலைத்தோட்டங்கள் மூடப்பட்டது. தொற்று குறைந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்