/* */

நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா நோயாளி அட்டகாசம்!

பந்தலூர் பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைக்க சென்ற சுகாதார அதிகாரிகளுடன் வாக்குவாதம், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா நோயாளி அட்டகாசம்!
X

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி பகுதியில், கொரோனா நோயாளிகள் சிலர், சுகாதாரத்துறையினருடன் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டலும் விடுத்தனர். 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி, மேஸ்திரிகுன்னு பகுதியில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களை, ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டில் இருந்து ஆம்புலன்சில் ஏற மறுத்து சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி பணியாளர்களுடன், அந்த நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நோய்த்தொற்று பாதித்தவர்கள், ஆம்புலன்ஸில் வர மறுப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த நோயாளிகளை சமாதானப்படுத்தி , பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் மீது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியது மற்றும் சுற்றித் திரிந்தது உள்ளிட்ட பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, நகராட்சி தரப்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 3 Jun 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்