குன்னூர் பேருந்து விபத்து: ஓட்டுநரின் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து

குன்னூர் பேருந்து விபத்து: ஓட்டுநரின் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து

 குன்னூரில் 50 அடி பள்ளத்தில் பேருந்து  கவிழ்ந்த விபத்து 

குன்னூர் பேருந்து விபத்தில் பேருந்து ஓட்டுநரின் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த 30ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஊட்டியில் இருந்து தனியார் பேருந்தில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மரப்பாலம் அருகே வந்த போது 50 அடி பள்ளத்தில் பேருந்துகவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர், பேருந்து ஓட்டுநர்கள் முத்துக்குட்டி, கோபால் மற்றும் பேருந்து உரிமையாளர் சுப்ரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சிகிச்சையில் இருந்து வந்த ஓட்டுநர் முத்துக்குட்டியை காவல்துறையினர் கைது செய்து, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் பேருந்தை ஓட்டி சென்றதற்காக முத்துக்குட்டியின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story