திருச்செங்கோடு அருகே டூ வீலர்கள் மோதல்: பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு
Tiruchengode Accident News Today
Tiruchengode Accident News Today-திருச்செங்கோடு அருகே உள்ள சித்தளந்தூர் பகுதியை சேர்ந்தவர் கவின் (20). பெயிண்டிங் தொழிலாளி. இவருடைய நண்பர் திருப்பதி (17). இவர் சித்தளந்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சித்தளந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை கவின் ஓட்டினார். திருப்பதி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பனங்காடு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்களும், கவின் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட திருப்பதி, கவின் இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். கவினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu