/* */

திருச்செங்கோடு அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ கைது

திருச்செங்கோடு அருகே நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஆர்.ஐ கைது
X

பைல் படம்.

திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் எலச்சிபாளையத்தில் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு (சர்வே) செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (48) விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பித்து ஒருமாதம் ஆகியும், அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார். மேலும், ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதாக அவர் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த ஆர்.ஐ பரமேஸ்வரனிடம் அந்த பணத்தை வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஆர்.ஐ பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 3 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...