/* */

1,100 கிலோ ரேசன் அரிசி கடத்திய தொழிலாளி கைது: மொபட் பறிமுதல்

திருச்செங்கோடு அருகே, கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

HIGHLIGHTS

1,100 கிலோ ரேசன் அரிசி கடத்திய தொழிலாளி கைது: மொபட் பறிமுதல்
X

நாமக்கல் மாவட்ட, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்.ஐ அகிலன், எஸ்எஸ்ஐ சத்தியபிரபு, ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டைபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள முட்புதர் அருகில், மொபட்டில் இருந்து, ஒருவர் அரிசி மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர், ராசிபுரம் அருகே கட்டநாச்சம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி (40) என்பதும் அவர் விற்பனைக்காக ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில், 22 பிளாஸ்டிக் சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த, 1,100 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், ரேசன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 9 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்