/* */

திருச்செங்கோடு அருகே லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது

திருச்செங்கோடு அருகே லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது
X

திருச்செங்கோடு அருகே 3,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது வீட்டிற்கு வரி அதிகமாக உள்ளது என்றும் அதை குறைத்து தரவேண்டும் என்றும் வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு வரியை குறைப்பதற்கு 7000 ரூபாய் லஞ்சமாக கேட்டு பின்பு 5000 ரூபாய் பேசப்பட்டு முதல் தவணையாக 3500 ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகத்திடம் கொடுத்தனுப்பினார்கள். அந்த பணத்தை திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் வைத்து ஆனந்தகுமார் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து ஆனந்தகுமாரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நகராட்சி வருவாய் அலுவலர் கோபியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Dec 2020 11:41 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  2. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  3. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  4. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  9. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  10. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!