31ல் நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை போராட்டம்

கர்நாடகாவிற்கு மின்சாரம் தடை செய்யக்கோரி மார்ச் 31ல் நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை போராட்டம்
கர்நாடகாவிற்கு மின்சாரம் அனுப்புவதை தடை செய்யக்கோரி, வரும் மார்ச் 31ம் தேதி நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளதாகவும், அதில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கையின்படி, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணைக்கட்டும் திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக காவிரி டெல்டா உரிமையை பறிக்க முயற்சி செய்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதியின்றி பொய்த்துப் போகும் என்றும், தமிழகத்தில் 22 மாவட்டங்கள் காவிரி குடிநீரையே நம்பியுள்ளதால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால், தமிழகத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட் கூட கர்நாடகாவிற்கு கொடுக்காமல் இருளில் மூழ்கடிக்கும் வகையில், நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் வரும் 31ம் தேதி அனல்மின் நிலையம் முன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu