நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஆண்டு விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் தனது உரையில், மாணவ மாணவியர் தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பயன்படுத்தி, பெற்றோரை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிறப்பாகப் படித்து உயர வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் விலங்கியல் துறைத்தலைவர் ராஜசேகர பாண்டியன், தாவரவியல் துறைத்தலைவர் ராஜேஸ்வரி, தமிழ்த்துறை தலைவர் கந்தசாமி, வரலாற்று துறைத்தலைவர் (பொறுப்பு) சந்திரசேகரன், புள்ளியியல் துறைத்தலைவர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu