Begin typing your search above and press return to search.
எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள, மேட்டுப்பட்டி பஞ்சாயத்து, வடுகப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சக்திவேல் (20). இவர் டிப்ளமோ படித்துவிட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் அடிக்கடி கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சக்திவேல், சம்பவத்தன்று தோட்டத்தில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அதைக்கண்ட அவரது தந்தை, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.