/* */

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள, மேட்டுப்பட்டி பஞ்சாயத்து, வடுகப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சக்திவேல் (20). இவர் டிப்ளமோ படித்துவிட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் அடிக்கடி கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சக்திவேல், சம்பவத்தன்று தோட்டத்தில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அதைக்கண்ட அவரது தந்தை, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...