/* */

சேந்தமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

சேந்தமங்கலம் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் மணிவண்ணன் (27). இவரது தம்பி பிரதீப் (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு அவர்களது வீட்டின் முன்பு, மணிவண்ணன் உடலில் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார்.

இதைக்கண்ட, அவரது தம்பி பிரதீப், நண்பர் யுவராஜ், தாய் சிவகாமி ஆகியோர் அவரை மீட்டுச் சென்று புதன்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மணிவண்ணன் உடலை அவர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர்.

இத்தகவல் அறிந்து நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?