Begin typing your search above and press return to search.
சேந்தமங்கலம் அருகே கழிவு நீர் சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சேந்தமங்கலம் அருகே கழிவு நீர் சாக்கடையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் முத்து (27). இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்கள் அங்குள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று, வீட்டில் இருந்து டூ வீலரில் சென்ற முத்து, கொண்டமநாயக்கன்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.