/* */

ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்

சேந்தமங்கலம் அருகே, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் ஏரியில் சம்பவத்தன்று இரவு, அனுமதியின்றி, பொக்லைன், டிராக்டர் இயந்திரங்கள் மூலம் சிலர் மண் அள்ளுவதாக பவித்திரம் விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அள்ளியதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த டிரைவர்கள் பவித்திரம் புதூர் நவலடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் ( 35), துரைசாமி (50), பிரபாகரன் (25), திருச்சி மாவட்டம் வாழசிராமணியை சேர்ந்த பிரபு (31) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களின் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 23 July 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!