சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சத்தியநாராயண பூஜை

சேந்தமங்கலம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சத்திய நாராயண பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ சத்திய நாராயண பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ லட்சுமி நாராயணப்பொருமாள் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு முதன் முறையறாக ஸ்ரீ சத்திய நாராயண விரத பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சத்திய நாராயண பூஜை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சந்திர வழிபாடு நடைபெற்து. மட்டையுடன் கூடிய தேங்காய்கள் பூஜையில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் விரதம் இருந்து பூஜையில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ கருடாத்ரி பக்தகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu