சேந்தமங்கலத்தில் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

சேந்தமங்கலத்தில் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்.

சேந்தமங்கலம் பகுதிகளில் வரும் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்தார்.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 22ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி