சேந்தமங்கலம் பகுதியில் 22ம் தேதி மின்விநியோகம் நிறுத்தம்

சேந்தமங்கலம் பகுதியில் 22ம் தேதி மின்விநியோகம் நிறுத்தம்
X

பைல் படம்.

சேந்தமங்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக வருகிற 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் வருகிற 22 ம்தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி, சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவுர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture