/* */

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலையில் கேட்பாரற்று கிடந்த 40 கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்
X

பைல் படம்.

கொல்லிமலையில் விலங்குகளை வேட்டையாட லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கிகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில், வாழவந்திநாடு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை வரவழைத்து செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ்மக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அவற்றை வைத்திருப்பவர்கள் தாமாக முன் வந்து போலீசில் ஒப்படைத்தால் கைது நடவடிக்கை இருக்காது. போலீசார் ரெய்டு நடத்தி கண்டுபிடித்தால் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம் பின்புறம் உள்ள முட்புதரில், துப்பாக்கிகள் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், எஸ்ஐ கெங்காதரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு