காதலுக்கு தாயார் எதிர்ப்பு: விரக்தியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

காதலுக்கு தாயார் எதிர்ப்பு: விரக்தியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
X

பைல் படம்

சேந்தமங்கலம் அருகே காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தியடைந்த ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் பம்பைக்காரர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தினேஷ் (19). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தினேஷ் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது தாயார் பார்வதி, தினேஷை கண்டித்துள்ளார். இதனால் தினேஷ் மனமுடைந்து காணப்பட்டார்.

அதையடுத்து தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அங்கு வந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story