கொல்லிமலையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. பொன்னுசாமி பங்கேற்பு
கொல்லிமலையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆலோசனையின் பேரில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் பைல்நாடு பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றணார். திரளான பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu