கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்
X

கோப்பு படம் 

வேளாண்மைத்துறை சார்பில், கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணையம் திட்டத்தின்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்து பேசியதாவது: கொல்லிமலை வட்டாரத்தில் கூட்டு பண்ணையம் திட்டம், 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பவர் டில்லர் வாங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருவதாகக் கூறினார்.

இக்கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான வரவு-செலவு கணக்குகள் படித்து சரிபார்க்கப்பட்டது. பின்னர், வருமானத்தைப் பெருக்குவதற்காகன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் அலுவலர் சத்யபிரகாஷ், துணை அலுவலர் சேகர் முற்றும் முன்னோடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?