எருமப்பட்டி அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

எருமப்பட்டி அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்.

எருமப்பட்டி அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள தோட்டமுடையாம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33), விவசாயி. இவர் தனது டூ வீலரில் செல்லியம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியோ, சைக்கிளில் வந்தவர் குறுக்கே சென்றதால் செந்தில்குமார் நிலை தடுமறி டூ வீலரில் இருந்து கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture