/* */

ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ. 3.80 லட்சம் கொள்ளை: 9 தொழிலாளர்கள் கைது

எருமப்பட்டி ரிக் வண்டி அலுவலகத்தில், ரூ.3.80 லட்சம் பணத்தை திருடிய வட மாநில தொழிலாளர்களை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ. 3.80 லட்சம் கொள்ளை: 9 தொழிலாளர்கள் கைது
X

எருமப்பட்டி அருகே ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3.80 லட்சம் கொள்ளையடித்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் நாமக்கல் பொன்னேரியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பங்குதாரராக உள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து போர்வெல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் கடந்த 4 மாதங்களாக சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

எருமப்பட்டி அருகே பொன்னேரியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம், ரிக் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த அலுவலகத்தில், வடமாநில தொழிலாளர்கள் 9 பேரும் தங்கி இருந்தனர். கடந்த 7-ந் தேதி காலையில் ராஜேஷ், பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் உள்ள தனது ரிக் வண்டி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அலுவலகத்தின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த டேபிளின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும், ரிக் வண்டியில் இருந்த சட்டீஸ் மாநில தொழிலாளர்கள் 9 பேரும் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. சட்டீஸ்கர் மாநில தொழிலாளர்கள்தான் பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என்று நினைத்து அவர் எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தப்பிஓடிய வடமாநில தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த கும்பல், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்கள் 9 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த ரிக் வண்டி தொழிலாளர்கள் விமல் யாதவ் (22), சேசன்தர்வோ (27), பிரதீப் (22), சஞ்சய் குமார் (19, ஜீதகமார் சூரி (20), தோவானாந்த் (23), துளசிநாத் (22), நாதாலாந்தீம் (28), லட்சுமண சின்னா (20) ஆகியோர் என்பதும், அவர்கள் தான் ரிக் வண்டி உரிமையாளர் ராஜேஷின் அலுவலகத்தில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் 9 பேரும் நாமக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

Updated On: 10 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்