எருமப்பட்டி அருகே இருவேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை, கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (50), விவசாயி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த ஆண்டு பெருமாள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி, அவரது வலது கை செயலிழந்து விட்டது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெருமாள் விஷம் குடித்தார். அதைக்கண்ட அவரது மனைவி அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இறந்தார்.
பெயிண்டர்:
எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் திவாகர் (20), பெயிண்டிங் தொழிலாளி.ரமேஷ் தனது குடும்பத்துடன் வீரப்பூர் கோயிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதற்காக அவர் திவாகரை அழைத்தார். ஆனால் திவாகர் அவர்களுடன் செல்லவில்லை. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த திவாகர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்து, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu