எருமப்பட்டியில் கஞ்சா செடி பயிரிட்ட 2 பேர் கைது: போலீசார் அதிரடி

எருமப்பட்டியில் கஞ்சா செடி பயிரிட்ட 2 பேர் கைது: போலீசார் அதிரடி
பைல் படம்.
நாமக்கல் அருகே எருமப்பட்டியில் கஞ்சா செடி பயிரிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா, எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவண பாண்டியன் (28). இவர் வீட்டின் அருகில் இருந்த காலி நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக, எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி, அங்கு சென்ற போலீசார், வாழை மரங்களுக்கு இடையே 3 அடி உயரமுள்ள 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை கண்டறிந்து அவற்றை அழித்தனர்.

இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவண பாண்டியனை கைது செய்து விசாரணை செய்தனர். அதைத் தொடர்ந்து, கஞ்சா செடி வளர்க்க சரவண பாண்டியனுக்கு உதவியதாக, எருமப்பட்டி வ.உ.சி தெருவை சேர்ந்த கர்ணன் மகன் வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story