/* */

நகைக்கடன் வழங்க கோரி வங்கி முற்றுகை

சேந்தமங்கலத்தில் நகை கடன் வழங்க கோரி வங்கியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்

HIGHLIGHTS

நகைக்கடன் வழங்க கோரி வங்கி முற்றுகை
X

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த இராமநாதபுரம் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நகை கடன் மற்றும் பயிர்கடன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்கியில் நகை கடனோ, பயிர் கடனோ வழங்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்களும், விவசாயிகளும் நகை கடன் வழங்காததை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் போலீசாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இன்று 5 நபருக்கும் திங்கட் கிழமை மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக நகை கடன் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 22 Jan 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...