/* */

ஜல்லிக்கட்டுக்கு பூமி பூஜை

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் நடப்பட்டது.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டுக்கு பூமி பூஜை
X

சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று எருமப்பட்டியில் விழாக்குழு சார்பில் முகூர்த்த கால் நடப்பட்டது.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து விழாக்குழு சார்பில் இன்று எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை சுத்தம் செய்து பூமி பூஜை செய்தும் காளை கன்றுக்கு பூஜை செய்தும் முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் எருமப்பட்டி ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டனர்.

Updated On: 18 Jan 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  2. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  3. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  4. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  5. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  7. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  9. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!