/* */

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ராசிபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
X

பைல் படம்.

ராசிபுரம் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய இளைய மகன் மணிகண்டன் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனை மணிகண்டன் பலமுறை கண்டித்தும் அவரது பேச்சை கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன், சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் தாய் பெருமாயி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ தங்கம், ஏட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 11:00 AM GMT

Related News