நாமகிரிப்பேட்டை அருகே கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்.

Latest Suicide News -நாமகிரிப்பேட்டை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Latest Suicide News - நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி (35) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூபதி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பூபதி கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற மங்களபுரம் போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story