/* */

ராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, லைசென்ஸ் இல்லாமல், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி  வைத்திருந்த விவசாயி கைது
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, ஆர்.புதுப்பட்டி பகுதியில், மதுவிலக்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, நாமகிரிப்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ விஜயராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆர்.புதுப்பட்டி பொன்னுவேல் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி திருப்பதி (52) என்பதும், அவர் வைத்திருந்தது லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர், ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 28 Jun 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்