/* */

இராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை

ராசிபுரம் கூட்டுறவு சங்கம் நாமகிரிபேட்டை கிளையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், ரூ.90 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனையானது.

HIGHLIGHTS

இராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை
X

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நாமகிரிப்பேட்டை கிளையில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, ஊனத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்திந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை கொள்முதல் செய்தனர்.

நேரடி ஏலத்தில் விரலி மஞ்சள் ரகம் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் 430 மூட்டைகளும், பனங்காலி ரகம் 70 மூட்டைகளும் விற்பனை செய்யப்பட்டன. விரலி ரகம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 332 முதல் ரூ.8 ஆயிரத்து 749 வரையிலும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 112 முதல் ரூ.7 ஆயிரத்து 12 வரையிலும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 402 முதல் ரூ.15 ஆயிரத்து 689 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 100 மூட்டை மஞ்சள் ரூ.90 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 11 Aug 2021 2:45 AM GMT

Related News