/* */

இராசிபுரம்: ஓடும் பஸ்சில் இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இராசிபுரம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

HIGHLIGHTS

இராசிபுரம்: ஓடும் பஸ்சில் இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
X

இராசிபுரம் அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் இனியா ஸ்ரீ (15) திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் இருந்து திம்மநாயக்கன்பட்டிக்கு, இனியாஸ்ரீ தனியார் பஸ்சில் சென்றுள்ளார். திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு சற்று தொலைவில் பஸ் நிறுத்தம் உள்ளது.

தனியார் பஸ் டிரைவர், அங்கு பஸ்சை நிறுத்தாமல், பள்ளிக்கு முன்பாக பஸ்சின், வேகத்தை குறைத்து மாணவியை விரைந்து இறங்குமாறு கேட்டுள்ளார். தேர்வு பதற்றத்தில் இருந்த மாணவி, பஸ் நிறுத்துவதற்கு முன்பே அவசரமாக பஸ்சில் இருந்து எதிர்திசையில் இறங்கியுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயமடைந்து, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...