/* */

மாநில அளவிலான என்சிசி முகாம்: இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான என்சிசி முகாமில் இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான என்சிசி முகாம்: இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
X

மாநில அளவிலான என்சிசி முகாமில் சிறப்பிடம் பெற்ற இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசு வழங்கினார்.

மாநில அளவிலான என்சிசி பட்டாலியன் மாணவர் படை வருடாந்திர முகாம், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. கமாண்டிங் ஆபீசர் அனில் வர்மா முகாமிற்கு தலைமை வகித்தார்.

முகாமில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்சிசி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

இதில், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் யோகேஸ்வரன், மற்றும் மாணவி சுகுணா ஆகியோர் சிறந்த என்சிசி பயிற்சி மாணவர்களாக தேர்வு செய்யபட்டனர்.

மேலும், இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை மாணவி யாழினி துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் இடம் பெற்று பதக்கங்களை பெற்றார். என்சிசி முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Updated On: 28 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்