/* */

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு

சோசியல் மீடியாக்களில் நடைபெற்று வரும் குற்றங்கள் குறித்த சைபர் கிரைம் போலீசார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு
X

ராசிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற, ஆன்லைன் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதப்பிரவி பேசினார்.

சோசியில் மீடியாக்களில் ஆன் லைன் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக மாணவ மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வேதப்பிரவி, எஸ்.ஐ சிவக்குமார் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடங்களை பயன்படுத்தும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்களது போட்டோக்களை, எந்தவித சோசியல் மீடியாவிலும் அப்லோட் செய்யக்கூடாது. தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும். ஆதார், பான் கார்டு எண், ஒடிபி. போன்ற தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், ஆன்லைன் வேலைவாய்ப்பு, ஆன் லைன் வங்கி கடன், கல்வி உதவி தொகை போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் எண்ணற்ற குற்றங்களை நடைபெறுகின்றன. எனவே இது போன்ற செயலிகளை பதவிறக்கம் செய்வதில் அதிக விழிப்புணர்வு தேவை என்றும் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 22 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...