/* */

பிரிந்த பெற்றோரை சேர்க்க முடியாமல் விரக்தி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் விரக்தியடைந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பிரிந்த பெற்றோரை சேர்க்க முடியாமல் விரக்தி: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் போர்வெல் வண்டியில் டிரில்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா (38) என்ற மனைவி, நர்மதா (19) என்ற மகள், தருண் (17) என்ற மகன் உள்ளனர்.

தருண் நாரைக்கிணறு அருகே உள்ள உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரிந்தனர். சேந்தமங்கலம் அருகே மேலப்பாளையத்தில் மகனுடன் மேகலா வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தருணுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை ரவி வேலை செய்யும் இடத்திற்கு தருண் சென்றுள்ளார். அப்போது, தந்தையைக் காண முடியவில்லை. இதில் தருண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இச்சூழலில் இன்று அதிகாலை மேலப்பாளையம் அருகில் உள்ள செங்கோட்டை காடு எனும் இடத்தில் தருண் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பேளுக்குறிச்சி போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்