/* */

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்க கோரி பெற்றோர்கள் முதல்வருக்கு கோரிக்கை

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் முதல்வருக்கு வேண்டுகோள்.

HIGHLIGHTS

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்க கோரி பெற்றோர்கள் முதல்வருக்கு கோரிக்கை
X

நர்மதா.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ராசிபுரம் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் ராமன். அவர் மனைவி லீலாவதி. இவர்களுக்கு நர்மதா (23) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நர்மதா உக்ரைன் நாட்டில் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவி நர்மதா இந்தியா திரும்ப முயற்சித்தார். விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவரால் தப்பி வர முடியவில்லை. மாணவி நர்மதா மற்றும் சில மாணவிகள், உக்ரைனில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அங்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது:

உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்குள்ள ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு வேளை கூட உணவு கிடைக்காமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள். தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகிவருகிறது. தங்கியிருக்கும் பகுதிகளில் தொடர்ந்து ரஷ்யராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதனால், நில அதிர்வுகள் ஏற்படுகிறது. உயிர் பயம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மாணவிகள் கூறி வருகின்றனர். அதனைக் கேட்டு எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிகவும் பயமாக உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவ மாணவிகளை மீட்டு தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 27 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!