/* */

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி

இராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மருத்துவர்கள்  செவிலியர்களுக்கு மனநல பயிற்சி
X

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்பட்டது. இது குறித்து மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ், உளவியலாளர் அர்ச்சனா ஆகியோர் கூறியதாவது :

கொரானா தொற்று இரண்டாம் அலை காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி கட்டாயம் தேவைப்படுகிறது. பயம், பதற்றம் எல்லாவித நோய்களிலும் ஓர் அறிகுறியாக தோன்றுகிறது. சில சமயம் அதுவே ஒரு நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நிம்மதியான தூக்கம் வருவதில்லை. இதனால் மன அழுத்தம் அதிகமாகிறது. அடுத்த நாள் வேலை பார்ப்பதில் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

அளவிற்கு அதிகமான பயம் மற்றும் பதட்டத்தினால் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனை தவிர்க்க நாள்தோறும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன இறுக்கம் தளரும் மனதில் அமைதி நிலவும். மன அழுத்தத்தைக் குறைக்க டிரஸ் பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை மேற்கொள்வதன் மூலம் மன இறுக்கம் தளரும். மனதில் அமைதி நிலவும். இரவினில் நன்றாக உறங்கலாம். மன அழுத்தத்தை குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம். இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மனநல பயிற்சி வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.

Updated On: 6 May 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்