/* */

ராசிபுரம் அரகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ராசிபுரம் அரகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர்

குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல், ஜூன்.24-

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பட்டி பகுதியில் கடந்த 2-ந் தேதி சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக கெடமலை பகுதியை சேர்ந்த காளி என்கிற சீரான் (40), சுப்பிரமணி (32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 லிட்டர் சாராயம் மற்றும் 800 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி போலீசார் அழித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் காளி என்கிற சீரான் மீது ஏற்கனவே கடந்த மாதம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் சாராய வியாபாரி காளி என்கிற சீரானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீரானிடம் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 24 Jun 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....