/* */

நாமகிரிப்பேட்டையில் மகளிர் குழு கட்டிட பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

நாமகிரிப்பேட்டை அருகே ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டையில் மகளிர் குழு கட்டிட பணி   அமைச்சர் துவக்கி வைத்தார்
X

நாமகிரிப்பேட்டை அருகே ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட திமுக பொறுப்பளர் ராஜேஷ்குமார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊனந்தாங்கல் கிராம பஞ்சாயத்து உள்ளது.

இங்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் துவக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.பி சுந்தரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி