/* */

ராசிபுரம் அருகே அதிசயம்...! இலை இல்லாத மா மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்கும் மாங்காய்கள்

ராசிபுரம் அருகே மா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் கொத்து கொத்தாய் மாங்காய்கள் காய்த்து தொங்கும் அதிசயத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே அதிசயம்...!  இலை இல்லாத மா மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்கும் மாங்காய்கள்
X

ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் தோட்டத்தில் இலையே இல்லாத மாமர கிளையில் கொத்து கொத்தாய் காய்த்துக்குலுங்கும் மாங்காய்கள்.

ராசிபுரம் :

ராசிபுரம் அருகே மா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் கொத்து கொத்தாய் மாங்காய்கள் காய்த்து தொங்கும் அதிசயத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இரண்டு மா மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு மரத்தின் கிளையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டியுள்ளார். அக் கிளையில் சில நாட்களுக்கு பின் இலைகள் ஏதும் இல்லாத நிலையில், ஏராளமான பூக்கள் மட்டும் பூத்தன. அதைத் தொடர்ந்து அக் கிளையில் மா பிஞ்சுகள் உருவாகியது. தற்போது அவை பெரிதாகி கிளை முழுவதும் மாங்காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்குகின்றன. மரத்தில் இலையே இல்லாத கிளையில் மாங்காய்கள் அதிக அளவில் காய்த்து தொங்குவது அதிசயமாக இருக்கிறது. அதை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Updated On: 11 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்