/* */

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்

இராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் விஜய் (19). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார்.

இவரும், அவரது நண்பர்கள் கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22), புதுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா (19) ஆகியோரும் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனந்தராஜ் மற்றும் சூர்யாவுக்கும் விளையாடிய விதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் புதுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் சூர்யா இருவரும் விஜய்யை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த விஜய் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விஜய்யை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Updated On: 26 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!