இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் விஜய் (19). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ளார்.

இவரும், அவரது நண்பர்கள் கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (22), புதுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா (19) ஆகியோரும் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனந்தராஜ் மற்றும் சூர்யாவுக்கும் விளையாடிய விதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் புதுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் சூர்யா இருவரும் விஜய்யை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த விஜய் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விஜய்யை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ai in future agriculture