ராசிபுரம் அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ராசிபுரம் அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X
ராசிபுரம் அருகே உடல் உபாதையால் விரக்தியுற்ற லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

ராசிபுரம் அருகே உள்ள பல்லவநாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் உத்தரமூர்த்தி (50), லாரி டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக தலையில் கட்டி இருந்ததால் வலி இருந்து வந்தது. அதற்காக பல டாக்டர்களிடம் அவர் சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare