/* */

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்

இராசிபுரம் பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்
X

குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கிய எம் பி.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 247 மையங்களில் உள்ள 2,997 பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துடன் கூடிய சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இராசிபுரம் பகுதியில் இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இரும்புச் சத்து சிறுதானிய பிஸ்கட் உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா, ஆர்.கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், 3 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க இரும்புச் சத்து நிறைந்துள்ள சிறுதானிய பிஸ்கட் உணவுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பள்ளிபாளையம் ஆகிய 2 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ராசிபுரம் வட்டத்தில் 78 அங்கன்வாடி மையங்களில் 758 குழந்தைகளுக்கும், பள்ளிபாளையம் வட்டத்தில் 169 மையங்களில் 2,239 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2 வட்டாரங்களில் முன்னோடி திட்டமாக 2,997 குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் 2022 அக்டோபர் மாதம் முடிய வேலை நாட்களில் சிறுதானிய பிஸ்கட்டுகள் வழங்கப்படும். சோளம், கம்பு, வரகு, சாமை, ராகி, கோதுமை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், வெல்லத்தூள், சமையல் சோடா ஆகிய கலவையோடு இரும்புச் சத்து மிகுந்த சிறுதானிய பிஸ்கட் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தைகள் மையப் பணியாளர்கள், குழந்தைகள், பெற்றோர் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சுகாதாரம் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவற்றை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கார்த்திகேயன், ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்