ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் வழிபாடு
இராசிபுரம் அருகில் உள்ள ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினர்.
இராசிபுரம் அருகில் உள்ள ஆர்.புதுப்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர், கோயில் எதிரே உள்ள குண்டத்தில், தீமிதி விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கினர். மாலையில் திருத்தேர் பெருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் துரைசாமி, நாராயண சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu