/* */

வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

வெண்ணந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
X

வெண்ணந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். அருகில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இராசிபும் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாசம்பட்டியில் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் செல்வம், ஒன்றிய திமுக செயலாளர்கள் வெண்ணந்தூர் துரைசாமி, நாமகிரிப்பேட்டை ராமசுவாமி, ராசிபுரம் ஜெகநாதன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், பட்டணம் டவுன் பஞ்சாயத்து செயலாளர் பொன்நல்லதம்பி, கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை, கலை பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பூபாலன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!