/* */

இராசிபுரம் பகுதிகளில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

இராசிபும் பகுதியில் பலத்த மழை வெளுத்து வாங்கியதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், இராசிபுரம், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி- மின்னலுடம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இராசிபுரம் நகரில் கடந்த 24 மணி நேரத்தில், 41.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பட்டணம், வடுகம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Updated On: 4 Oct 2021 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?