/* */

ராசிபுரம்: காரில் மண்ணுளி பாம்பு கடத்தல் - 3 பேர் கைது

ராசிபுரம் அருகே காரில் மண்ணுளி பாம்பை கடத்தி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரம்: காரில் மண்ணுளி பாம்பு கடத்தல் - 3 பேர் கைது
X

ராசிபுரத்தை அடுத்த கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில், அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை முழுமையாக சோதனையிட்டனர். காரில் 2 சாக்கு மூட்டைகளில் சுமார் 4 அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட, 2 மண்ணுளிப் பாம்புகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது தப்பியோட முயன்ற 3 பேரையும் வெண்ணந்தூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

காரில் வந்த மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49), ஆல்பின் (48), வில்பிரின் (36) என்பது தெரிய வந்தது. 3 பேரிடமும் போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் மூவரும் மண்ணுளி பாம்பை ராயவேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட மற்ற நபர்களை பிடிப்பதற்காக வனத்துறையினர் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது.

Updated On: 14 Jun 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...