/* */

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு

இராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு
X

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நோயாளியின் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆயில்பட்டியில் ரூ.6.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நாவல்பட்டி ஊராட்சி ந.உடையார்பாளையம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணி, திம்மநாய்க்கன்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மத்ரூட்டு பஞ்சாயத்து கணவாய்மேடு கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

பின்னர், ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருந்து, மாத்திரைகள அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் செல்வராஜ், ஜெயக்குமார், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...