/* */

இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்; கபசுரக் குடிநீர் வழங்கல்

இராசிபுரம் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு  பிரச்சாரம்; கபசுரக் குடிநீர் வழங்கல்
X

இராசிபுரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இøதையொட்டி இராசிபுரம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், அரசு ஆஸ்பத்திரி சித்தா மருத்துவ அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தனர்.

மேலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கபசுரப் பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோனிஷா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், பாஸ்கர், சிவா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...