நாமகிரிப்பேட்டை அருகே வேன் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

நாமகிரிப்பேட்டை அருகே வேன் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X
நாமகிரிப்பேட்டை அருகே வேன் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (55). விவசாய கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை செய்து விட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். தண்ணீர்பந்தல் காடு பகுதியில் அவர் வந்தபோது, அவ்வழியாக வந்த வேன், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ரங்கசாமி பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
ai in future agriculture