Begin typing your search above and press return to search.
நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
இராசிபுரத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள, பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வகுப்பறை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி. சுந்தரம், நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.